/* */

திருவண்ணாமலை: மேற்கு வங்காள தொழிலாளி கீழே விழுந்து பலி

திருவண்ணாமலையில் கட்டுமான பணியில் ஈடுபட்ட மேற்கு வங்காள தொழிலாளி கீழே விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: மேற்கு வங்காள தொழிலாளி கீழே விழுந்து பலி
X

மேற்கு வங்காளம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாஹிர் (வயது 23). இவர் திருவண்ணாமலையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்த அவர் 2-வது மாடியிலிருந்து கான்கிரீட் போடுவதற்கான பொருள்களை எடுத்துக்கொண்டு கீழே வந்தபோது தவறிக் கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை, சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  3. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  4. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  5. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  6. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  7. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  9. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி