/* */

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சாமியார் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது
X

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சாது பாக்கியநாதன்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சாதுக்கள் வசித்து வருகின்றனர். கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும், கஞ்சா போதையில் சில சாதுக்கள் தகராறில் ஈடுபடுவது, கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்பி பவன்குமார், கிரிவலப்பாதையில் போலீசார் ரோந்து செல்லவும், புதிதாக போலீஸ் ரோந்து வாகனமும் இயக்கி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.

நேற்று இரவு கிரிவலப்பாதையில், ஏஎஸ்பி கிரண்சுருதி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வாயு லிங்கம் கோவில் அருகில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த சாமியார் ஒருவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் விற்பனைக்காக சுமார் 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் (வயது 52) எனத் தெரியவந்தது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார் ஒருவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 5 April 2022 1:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது