/* */

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை-சேலம் இடையே திருவண்ணாமலை மாவட்டம் வழியாக 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்ட  விவசாயிகள் சங்கத்தினர்.

சென்னை-சேலம் இடையே திருவண்ணாமலை மாவட்டம் வழியாக 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பலராமன், செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள, ''சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும். 8 வழி சாலை திட்டத்திற்கு 6 வழிச்சாலை, பசுமை வழிச்சாலை என வேறு பெயர் சூட்டி மக்களை ஏமாற்றக் கூடாது. சென்னை- சேலம் இடையே எந்த புதிய சாலையும் வேண்டாம். இருக்கும் சாலைகளை அகலப்படுத்தி இயற்கை மற்றும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்'' என்று கோஷங்கள் எழுப்பினர்.

ஒருங்கிணைப்பாளர் அபிராமன் கூறுகையில், ''8 வழி சாலை திட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த தி.மு.க. அரசாங்கம் ஆட்சி அமைத்தபின் தன்னுடைய நிலையை மாற்றி கொண்டதா என்ற பெருத்த சந்தேகம் தற்போது எழுந்து உள்ளது.

தற்போது சட்டமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் முதல்- அமைச்சர் பதில் சொல்ல வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 6 வழிச்சாலை, பசுமை வழிச்சாலை, விரைவு சாலை என்று எந்த பெயரிலும் 8 வழிச்சாலையை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அதேவேளையில் இருக்கும் சாலையை அகலப்படுத்தி அதிவிரைவு சாலைகளை அமைத்து கொள்ள பொதுமக்களும், விவசாயிகளும் தயாராக இருக்கிறோம். எனவே அரசாங்கம் இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். மேலும் சட்டமன்றத்தில் முதல்- அமைச்சர் 8 வழிச்சாலையை கொண்டு வர மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட தலைவர் சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ராமதாஸ், வீரபத்திரன், செல்வம், 8 வழிச்சாலை துணை ஒருங்கிணைப்பாளர்கள் அழகேசன், பச்சையப்பன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  4. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  7. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  8. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  9. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைக்கு ஏற்ற பாசிடிவ் மேற்கோள்கள்....!