Begin typing your search above and press return to search.
பக்தர்களின்றி நடைபெற்ற திருவண்ணாமலை பிச்சாண்டவர் ஊர்வலம்
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் ஊர்வலம் பக்தர்கள் யாருமின்றி கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் 8ம் நாளான இன்று மாலை பிச்சாண்டவர் உற்சவம் எனும் பிச்சை தேவர் விழா நடந்தது.
சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம் ஆகும். இது இருபத்து நான்கு மற்றும் அறுபத்துநான்கு சிவமூர்த்தங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இக்கோலம் தாருகா வன முனிவர்கள் ஆணவத்தினை அழிப்பதற்காக சிவனார் எடுத்த கோலமாகும் .
பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, திருக்கோயில் பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது பக்தர்கள் இன்றி அண்ணாமலையார் திருக்கோயில் பிராகாரம் வெறிச்சோடி காணப்படுகிறது.