Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை அஞ்சல் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி பென்சன் அதாலத்
திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் அலுவலகத்தில் ஜூன் 28ம் தேதி பென்சன் அதாலத் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் 2022-ம் ஆண்டின் முதலாவது பென்சன் அதாலத் என்னும் அஞ்சல் பென்சன் தாரர்கள் நேர்காணல் கூட்டம் திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் ஜூன் 28-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளன. எனவே அஞ்சல் பென்சன் தாரர்கள் தங்கள் குறைகளை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு வரும் 24ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தால் அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.