பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீச்சல்குளம் அனுமதி
நீச்சல்குளம் பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த மாவட்ட விளையாட்டரங்க நீச்சல்குளத்தை தற்போது பொதுமக்கள் பயன்படுத்திடவும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல்குளத்தினை பயன்படுத்த வருபவர்கள் உரிய நீச்சல் உடையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நீச்சல்குளத்தினை பயன்படுத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் நீச்சல்குள வளாகத்தில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.
10 வயதிற்குட்பட்டவர்கள், 64 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் நீச்சல்குளத்தினை பயன்படுத்திட எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்கப்படமாட்டாது. கைகள் அழுக்காக இல்லாத போதும் கைகளை சோப்பினை பயன்படுத்தி சுத்தம் செய்தல் வேண்டும். ஆல்கஹால் சானிடைசர்களை சாத்தியமான இடங்களில் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எனவே திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நீச்சல்குளத்தினை பயன்படுத்திட மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு(ம) இளைஞர் நலன் அலுவலர் திருவண்ணாமலை மாவட்டம் அவர்களை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.