மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி: மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு
நெல்லை மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியை தடுப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு.
HIGHLIGHTS
நெல்லை மாநகர குடியிருப்பு பகுதிகளில் மழை நீரால் கொசு,புழுக்கள் உற்பத்தி ஆகிறது என மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நெல் திருநெல்வேலி மாவட்டத்தில் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை நீர் தேங்கி கொசு, புழுக்கள் உற்பத்தியை தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவின்படி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் ஜஹாங்கீர்பாஷா டார்லிங்நகர், ரகுமத்நகர், காமராஜர்நகர் ஆகிய பகுதிகளில் செயல்படும் நுண்உரம் செயலாக்க மையத்தில் நேரில் பார்வையிட்டு மழைநீரால் ஏதும் பாதிப்பு இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம் உடன் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சுகாதார அலுவலர் ஷாகுல்ஹமீது, ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் லார்வா கொசுப்புழு உற்பத்தி உள்ளனவா? என மாநகராட்சி பணியாளர்களுடன் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் திருநெல்வேலி மண்டலம் சுத்தமல்லி, கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.