/* */

மோடி,இபிஎஸ்சை செல்லா காசாக்க வேண்டும்- உதயநிதி

மோடி,இபிஎஸ்சை செல்லா காசாக்க வேண்டும்- உதயநிதி
X

மோடியையும் எடப்பாடி பழனிச்சாமியையும் செல்லா காசாக்க வேண்டும் என திருநெல்வேலி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏஎல்எஸ்.லட்சுமணனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி தச்சநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:புதிய இந்தியா பிறக்க போவதாக மோடி தெரிவித்தார். நானும் 3 ஆண்டுகளாக போகும் இடங்களில் எல்லாம் தேடி பார்க்கிறேன். புதிய இந்தியாவை காணவில்லை. இதுவரை 15,000 கோடி மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி கொடுத்துள்ளோம். அதை திருப்பி கேட்டால், நிதி நெருக்கடி இருப்பதால் தர முடியாது என்கிறார் மோடி.

ஆனால் அவர் மட்டும் செல்வதற்காக 8,000 கோடியில் புது சொகுசு விமானம் வாங்கியுள்ளார். 10,000 கோடியில் புது நாடாளுமன்றம் கட்டுகிறார். இது யார் பணம்? உங்களின் பணம். வரும் தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்து மோடியையும், எடப்பாடிபழனிச்சாமியையும் செல்லா காசாக்க வேண்டும் என கூறினார்.

Updated On: 24 March 2021 9:13 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு