மேற்கு வங்க முதல்வர் கண்டித்து திருவாரூர் முழுவதும் போராட்டம்
திருவாரூரில் மேற்கு வங்க முதல்வரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மேற்குவங்கத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை கண்டித்து திருவாரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் பா.ஜ.க. சார்பில் திருவாரூர் ஓன்றியம் விளமல் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் பா.ஜ.க. .மாவட்ட துணை தலைவர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார்.
இதில் ஒன்றிய தலைவர் செந்தில் வேலன் மாவட்ட நிர்வாகிகள் மது சுந்தரேஸ்வரர் ,எட்டில் சிவா, கழுகு சங்கர் வாசன் நாகராஜன், கொட்டாரக்குடி பாலா, மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.