/* */

ஊரக உள்ளாட்சி தேர்தலை முழுமையாக ரத்து செய்து மறு தேர்தல் நடத்த அமமுக கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முழுமையாக ரத்து செய்து மறு தேர்தல் நடத்த அமமுக கோரிக்கை

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தலை முழுமையாக ரத்து செய்து மறு தேர்தல் நடத்த அமமுக கோரிக்கை
X

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலை முழுமையாக ரத்து செய்து மறு தேர்தல் நடத்த அமமுக மாவட்ட செயலாளர் கோரிக்கை.

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலை முழுமையாக ரத்து செய்து மறு தேர்தல் நடத்த கோரி அமமுக மாவட்ட செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 76 அமமுக வேட்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர். நடந்து முடிந்த தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றதாக முறைகேடு பட்டியல் ஒன்றை வெளியிட்டார் அதில் கூறியதாவது:-

சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் வேட்பாளருக்கு முன்னிலையில் தான் சீல் அகற்ற பட வேண்டும். ஆனால் அப்படி அகற்றப்படவில்லை. அது போல, வாக்கு சாவடி தலைமை அலுவலரின் கையொப்பமிட்டு வேட்பாளருக்கு அளித்த படிவத்தில் வாக்குகளும், சீல் அகற்றப்பட்ட பின்பு எடுத்த வாக்குகளையும் சரி பார்த்து இருக்க வேண்டும். அதன் பின்பு , சீல் அகற்றப்பட்ட பெட்டியில் இருந்து வாக்குகளை பிரிக்கும் இடத்தில் வேட்பாளர்கள் அனுமதிப்படவில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் 4 முதல் 5 மணி நேரம் கால தாமதமானது. கால தாமதத்திற்கு அதிகாரிகளிடம் சரியான பதில் இல்லை. சீல் வைக்கப்பட்ட வாக்குபெட்டிகள் இருந்த வாக்குகள் மட்டும்தான் வாக்கு எண்ணும் மையத்தில் கொண்டு வரப்பட்டதா ? மேலும் சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிக்குள் இருந்த வாக்கு சீட்டுகள் நன்றாக மடித்து வைக்கப்பட்டவை. ஆனால், மடித்து வைக்கப்படாத புத்தம்புதிய வாக்கு சீட்டுகள் அனைத்தும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு மேஜைக்கு ஒரு முகவர் என்ற விதி ஆளுங்கட்சியினர்களால் கடைப்பிடிக்கப்படவில்லை.

கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை. ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் நிரம்பி இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் எப்படி வாக்கு சரியாக எண்ணப்படுகிறதா என்று உறுதிபடுத்த முடியும். வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூத் எண்ணையும், அதில் உள்ள வாக்குகளையும் அறிவித்துவிட்ட பின்பு தான் வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும்.

ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர் பெற்ற வாக்குகளை அறிவித்த பின்பு தான் அடுத்த சுற்றை தொடங்க வேண்டும்.வாக்கு எண்ணிக்கை முன்னுக்கு பின் முரணாக அதிகாரிகள் எண்ணப்படி வாக்கு எண்ணிக்கையை நடத்தினார்கள். வேட்பாளர்கள் குழப்பத்திலேயே இருந்தார்கள். கண்காணிப்பு கேமரா வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டிருந்தது.

ஆனால், பொருத்தப்பட்டிருந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.தேர்தல் நடைமுறை விதிகளை பின்பற்றாமல் ஆளுங்கட்சியினரின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் ஒருதலை பட்சமாக நடந்துகொண்டு தேர்தல் வெற்றிகளை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். ஆகவே இந்த முறைகேடாக நடைபெற்ற தேர்தலை தமிழக முதல்வர் நேர்மையானவர் என்றால் முழுமையாக ரத்து செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும். தற்போது மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரி அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். இந்த மனுவை எங்களது பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தமிழக முதல்வருக்கும் அனுப்ப உள்ளோம், தென்காசி மாவட்டத்தில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார், அவருடன் மாவட்ட இணைச்செயலாளர் குமரேச ராஜா, மாவட்ட துணைச்செயலாளர் சுமதி கண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுப்பிரமணியன் எ சுரேஷ், மாணவரணி செயலாளர் வெங்கடேஷ், மகளீரணி செயலாளர் நாகலெட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பெரிய துரை பாலமுருகன், பேரூர் கழக செயலாளர்கள் துரைப்பாண்டி, அம்மாதாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Oct 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி