வரைவு வாக்குச்சாவடி பட்டியல்: அரசியல் கட்சியினரின் கருத்துகேட்பு கூட்டம்
ராணிப்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு குறித்து கட்சியினரின் கருத்து கேட்புகூட்டம் நடந்தது
HIGHLIGHTS
ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைகேட்பு அரங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர்கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கடந்த 2நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
பின்னர், அவற்றிற்கான கருத்து மற்றும் ஆட்சேபனைகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைகேட்பு அரங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமைதாங்கினார். உடன் திட்ட இயக்குனர், ஊராட்சி உதவி இயக்குனர்உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், மற்றும் அரசியல்கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் தொடர்பாகவும், வரைவு செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் குறித்து கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
பின்னர்அவற்றின்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்டுள்ள கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர் .
பின்னர் அவற்றை மனுக்களாக அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.