Begin typing your search above and press return to search.
மோகனூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
மோகனூர் அருகே விஷம் குடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவி பாப்பாயி (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி மருமகன் இறந்து விட்ட நிலையில் மகள் மற்றும் மகனுடன் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் மகளின் வாழ்க்கையை என்னி பாப்பாயி மனவருத்தத்தில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 22ம் தேதி விஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பம் குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்.எஸ்.ஐ பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.