/* */

நாமக்கல்லில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் செய்ய 24ம் தேதி சிறப்பு முகாம்

நாமக்கல் கோட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் செய்ய 24ம் தேதி சிறப்பு முகாம்
X

பைல் படம்

நாமக்கல் கோட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மின்விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் நகரம், வளையப்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதன்சந்தை, புதுச்சத்திரம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் கொல்லிமலை உள்ளிட்ட, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள், தங்கள் மின்இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை, நாமக்கல் மோகனூர் ரோட்டில், கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள, நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சிறப்பு முகாமிற்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், வீடு மற்றும் கடைகள்(வணிக பயன்பாடு) மின்இணைப்புகளுக்கு, வீட்டுவரி ரசீது, பத்திரநகல், வாரிசுதாரர்களிடமிருந்து ஆட்சேபனையின்மை கடிதம் கொண்டு வரவேண்டும். விவசாய மின்இணைப்புகளுக்கு, பத்திர நகல் அல்லது பட்டா, கிராம நிர்வாக அலுவலரின் உரிமைச்சான்று, புலவரைபடம், தாழ்வழுத்த ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

தொழில்முறை மின்இணைப்புகளுக்கு, தாழ்வழுத்த ஒப்பந்திர பத்திரம், சொத்துவரி ரசீது, பத்திரநகல் போன்ற சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Jan 2023 1:00 AM GMT

Related News