உள்ளாட்சி தேர்தல்: நாமக்கல்லில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறையை நாமக்கல் கலெக்டர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 5 நகராட்சிகளில், 361 வாக்குச்சாவடிகளும். 19 டவுன் பஞ்சாயத்தக்களில் 318 வாக்குச்சாடிகளும் என மொத்தம் 679 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணுவதற்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு, தடுப்பு வேலிகள் அமைத்தல், ஓட்டு எண்ணும் அறைகள், மற்றும் இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள அறைகளை தயார் செய்யவும், ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளும் வகையில், ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 1 முதல், 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 16 மற்றும் 17ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
முனிசிபாலிட்டி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அனைத்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 18, 19 ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரிய ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு 18 முதல் 22ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.