/* */

நாமக்கல்லில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்

நாமக்கல்லில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், 844 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஏடிஎம் கார்டுகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்
X

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம் கார்டுகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, நாமக்கல் நகராட்சித்தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம் கார்டுகளை, 844 மாணவிகளுக்கு வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.

நிகழ்ச்சியில் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, முன்னாள் எம்.பி சுந்தரம், நகராட்சி துணைத்தலைவர் பூபதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், நகராட்சி கவுன்சிலர்கள் சிவக்குமார், கிருஷ்ணலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்தன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  3. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  4. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  8. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...