/* */

நாமக்கல்லில் வெடித்து சிதறிய மின்சாதன பொருட்கள்: அலறியடித்து வெளியே வந்த மக்கள்

நாமக்கல் நகரில் உயர் மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் 50 லட்சம் மதிப்பலான டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வெடித்து சிதறிய மின்சாதன பொருட்கள்: அலறியடித்து வெளியே வந்த மக்கள்
X

பைல் படம்.

நாமக்கல், திருச்சி ரோட்டில் உள்ள ஆண்டவர் நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பர்மரில் இருந்து செல்லும் மின் கம்பி, அரசு கேபிள் டிவி ஒயரின் மீது உரசியது.

அப்போது உயர்மின் அழுத்தம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த டிவி, வாசிங்மெஷின், குளிர்சாதன பெட்டி, கணினி உள்ளிட்ட பொருட்கள் வெடித்துச் சிதறியது. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஒடிவந்தனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களுக்கும் கேபிள் டிவி நிறுவனத்திற்கும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் உயர் மின்னழுத்தம் காரணமாக, வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதாகி உள்ளது. ஏற்கெனவே மின்கம்பியும் கேபிள் டிவி ஒயரும் உரசி தீப்பிடிப்பதாக மின்வாரிய அலுவலகத்திற்கும் கேபிள் டிவி நிறுவனத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது, ஒரே நேரத்தில் பல வீடுகளில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் சேதமாகி உள்ளன. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சனைக்கு உரிய தீர்வுகாண வேண்டும் என்றனர்.

Updated On: 6 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  10. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா