நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் அட்மிஷன் கவுன்சலிங் துவக்கம்
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கியது.
HIGHLIGHTS
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது.
முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், என்சிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு சேர்க்கை கவுன்சலிங் நடைபெற்றது. மொத்தம் உள்ள 970 இடங்களுக்கு முதல்நாளில் 64 இடங்களுக்கு 182 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு கவுன்சலிங்கை கல்லூரி முதல்வர் (பொ) பாரதி நடத்தினார்.
கணிதத்துறை தலைவர் எனிமல் நவனோதி, பொருளாதாரத்துறை தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் மாணவிகளிடம் கலந்தாய்வு நடத்தி சேர்க்கை வழங்கினார்கள்.
நாளை, சனிக்கிழமை பொருளியல், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கும், வரும் திங்கள்கிழமை கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கும், புதன்கிழமை வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. வியாழக்கிழமை தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது.