நாமக்கல்லில் ஏப்.21ம் தேதி மல்பெரி சாகுடி குறித்து இலவச பயிற்சி முகாம்
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 21ம் தேதி மல்பெரி சாகுபடி குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 21ம் தேதி மல்பெரி சாகுபடி குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் வருகிற 21ம் தேதி காலை 10 மணிக்கு மல்பெரிசாகுபடி குறிப்புகள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மல்பெரியின் ரகங்கள், நடவுமுறைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, பட்டுவளர்ப்பு துறையில் உள்ளள திட்டங்கள், மல்பெரியில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றி விரிவாக கற்றுத்தரப்படும்.
மேலும் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பட்டு வளர்ச்சித்துறை உதவிப்பேராசிரியர் ஆன்லைன் மூலம் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளார். இதில் விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். விருப்பமுள்ளவர்கள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என பயிற்சி நிலைய தலைவர் டாக்டர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.