நாமக்கல் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த எம்.பி
நாமக்கல் ஐயப்பன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமை எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் திரளான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 5 ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா கொரோன தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின் பேரில் 6வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 23ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், கோயில்கள், திருமண மண்டபங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் நடமாடும் மையங்கள் உள்ளிட்ட 750 முகாம்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 1.30 லட்சம் போருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாமக்கல் ஐயப்பன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற முகாம் துவக்க விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். நகரட்சி கமிஷனர் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. அவர்கள் அதில் தங்களின் முகவரி மற்றும் செல்போன் நம்பரை எழுதி முகாம்களில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் அவற்றைப் போட்டு சென்றனர். வருகின்ற 25ம் தேதி திங்கள்கிழமை நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, வணிகர் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் மூலம் தங்கக்காசு மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது.