Begin typing your search above and press return to search.
மோகனூர் டவுன் பஞ்சாயத்து கூட்டம்: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மோகனூர் டவுன் பஞ்சாயத்து கூட்டத்தில், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
HIGHLIGHTS
மோகனூர் டவுன் பஞ்சாயத்து அவசர கூட்டம், அதன் தலைவர் வனிதா மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சரவண குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்து வரி உயர்வு அமல்படுத்துவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை அமல்படுத்தக் கூடாது என்றும், அதிமுக உறுப்பினர்கள் ராஜவடிவேல், வாசுகி ஆகியோர் டவுன் பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.