Begin typing your search above and press return to search.
தொடர்மழை எதிரொலி: நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதிகாலை நேரத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று 8ம் தேதி ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:
நாமக்கல் டவுன் 6 மி.மீ, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 1 மி.மீ., மங்களபுரம் 16.4 மி.மீ, புதுச்சத்திரம் 2 மி.மீ, ராசிபுரம் 7 மி.மீ, சேந்தமங்கலம் 11 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 5 மி.மீ.