பத்திரப்பதிவில் முறைகேடு புகார்: பரமத்திவேலூர் சார்பதிவாளர் பணிநீக்கம்
பத்திரப்பதிவில் முறைகேடு புகார் எதிரொலியாக, பரமத்தி சார்பதிவாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி பத்திரப்பதிவு அலுவலகத்தில், சார்பதிவாளராக பணியாற்றி வருபவர் முரளி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு ராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய போது, சொத்து விற்பனையை பதிவு செய்வதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் கூறப்பட்டது. மேலும், கோர்ட் வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்யும் பத்திரத்தை பதிவு செய்தது, வேறு சில பத்திரங்களில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது, போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக, அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக பதிவுத்துறை தலைவர் சிவன்அருள், பரமத்தி சார்பதிவாளர் முரளிகிருஷ்ணாவை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.