Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் டூ வீலர் மீது கார் மோதல்: மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
நாமக்கல்லில் டூ வீலர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல்- திருச்சி ரோட்டில் உள்ள ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் வளையப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிந்து வந்தார்.
அவர் வளையப்பட்டியில் இருந்து தனது டூ வீலரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். நாமக்கல்-திருச்சி மெயின் ரோட்டில் எஸ்.கே. நகர் அருகே வந்தபோது அவருக்குப் பின்னால் வந்த கார் ஒன்று அவரது டூ வீலரில் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.