/* */

கொடுக்கல், வாங்கல் பிரச்னை: நிதி நிறுவன அதிபர் தூக்கிட்டு தற்கொலை

வாங்கல் அருகே நிதி நிறுவன பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கொடுக்கல், வாங்கல் பிரச்னை: நிதி நிறுவன அதிபர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

சங்கரம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(39). இவரும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி(40), முருகேசன்(43) ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளனர். அதனடிப்படையில் சுரேஷ்குமாருக்கு இருவரும் பணம் தர வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சுரேஷ்குமார் உள்ளூரை சேர்ந்த சிலரின் உதவியுடன் சுப்பிரமணி மற்றும் முருகேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுப்பிரமணி பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த சுரேஷ்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை கண்ட அவரது மனைவி தனலட்சுமி அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாங்கல் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 19 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...