/* */

2 நாள் பயணமாக குமரி வந்தார் தமிழக கவர்னர் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக கவர்னர் ரவி, குமரிக்கு வந்துள்ளார்; இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

2 நாள் பயணமாக குமரி வந்தார் தமிழக கவர்னர் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
X

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்த ஆளுனர் ரவிக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, இரண்டு நாள் பயணமாக இன்று குமரி மாவட்டம் வந்தடைந்தார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்த அவரை, மாவட்ட ஆட்சியர் அரவிந்த், தென்மண்டல ஐ.ஜி.அன்பு, டி.ஐ.ஜி.பிரவின்குமார் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், மாலை 4 மணிக்கு சொகுசு படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி, அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று தியானம் செய்கின்றார்.

தொடர்ந்து விவேகானந்த கேந்திர வளாகம் சென்று விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடும் அவர் அங்கிருந்து ராமாயண தரிசன கூடத்தை பார்வையிடுகின்றார். தொடர்ந்து நாளை அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்த பின்னர், கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்கின்றார். கவர்னர் வருகையை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் 500-கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

Updated On: 24 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி