/* */

காஞ்சிபுரம் மாவட்டம் : 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சற்று முன்பு நிறைவு பெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டம் :  2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு
X

 சுங்குவார்சத்திரம் அருகே உள்ள வாக்கு சாவடியில் முகவர்கள்‌ முன்னிலையில் வாக்குப் பெட்டி சீல் வைக்கும் பணியில் அலுவலர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் 601 வாக்குச் சாவடிகள் இதற்காக அமைக்கபட்டு இருந்தது.

காலை முதல் மாலை 3 மணி வரை அமைதியாகவே நடைபெற்று வந்த வாக்குப்பதிவு அதன்பின் வேகமெடுத்து வாக்குப்பதிவு மற்றும் வாக்குகள் பெறுவதில் கட்சி உறுப்பினர்கள் தீவிரம் காட்டி வந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களில் சில பகுதிகளை மட்டும் அவ்வப்போது சலசலப்பு எழுந்து காவல்துறையால் கட்டுபடுத்த பட்டது.

இந்நிலையில் மாலை 6 மணி வரை வளாகத்தில் இருந்த நபர்களுக்கு மட்டுமே வாக்குப்பதிவு செலுத்த டோக்கன் அளித்து அனுமதி அளிக்கப்பட்டு அதன் பின் வந்த அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தற்போது பல வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நிறைவு பெற்று வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 9 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  3. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  5. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  6. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  8. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  9. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  10. ஈரோடு
    ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்:...