Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் காவல்துறை தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு காவல்துறை தேர்தல் பார்வையாளராக வந்த ஷியாம் சுந்தர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தனிமைப்படுத்தி கொண்டார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இணைந்து காவல்துறை தேர்தல் பார்வையாளராக .ஷியாம் சுந்தர் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று மாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்பட்டது. இந்நிலையில் அவர் தங்கியிருந்த சுற்றுலா மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கபட்டது. மேலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.