Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் பிடிஓ அலுவலகத்தில் ரூ.1500 லஞ்சம்: பெண் ஊழியர் கைது
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற 1500லஞ்சம் பெற்ற பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன மின்ஊழியர் மணிகண்டன். இவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் , முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய சலுகைகளுக்குண்டான ஆவணங்களை சமூக நலத்துறைக்கு அனுப்பாமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் நல அலுவலராக பணி செய்யும் பாக்கியவதி என்பவர் மணிகண்டனிடம், 50000 லஞ்சம் கேட்டு அலைக்கழிக்க வைத்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைசெல்வனிடம் புகார் அளித்தன் பேரில் இன்று 1500ரூபாய் முன்பணம் வாங்கும்போது கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் இவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கவுள்ளனர்.