/* */

சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையில் இருந்து விவசாயப் பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

HIGHLIGHTS

சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறப்பு
X

அமைச்சா் எ.வ.வேலு சாத்தனூா் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையில் இருந்து விவசாயப் பாசனத்துக்காக சனிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது..

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தமிழகத்தின் மிக முக்கிய அணைகளில் ஒன்றாக விளங்கும் சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதைத்தவிர 90-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரங்களை பெற்று வருகிறது. மேலும் அணை நீரை பயன்படுத்தி பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையில் இந்த ஆண்டு தேவைக்கான மழை பெய்து சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. தற்போது அணையில் 118.55 அடி உயரத்திற்கு 7220 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று முதல் வருகிற ஜூன் 8-ந்தேதி வரை 90 நாட்களுக்கு சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இடதுபுற கால்வாய் மூலம் 350 கன அடி நீரும், வலது புற கால்வாய் மூலம் 220 கன அடி நீரும் ஆக மொத்தம் 570 கன அடி நீர் நாள் ஒன்றுக்கு திறக்கப்படுகிறது.

இதற்கான தண்ணீர் திறப்பு விழா சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், உதயசூரியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சாத்தனூா் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அணையின் உச்ச நீா்மட்டம் 119 அடி. மொத்த நீா் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இதில், சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 118.55 அடி உயரத்துக்கு 7,220 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கி இருந்தது. இதில் 5,567 மில்லியன் கன அடி தண்ணீரை விவசாயத்துக்கு திறந்து விட்டுள்ளோம். மாா்ச் 11 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை 90 நாள்களுக்கு தொடா்ந்து தண்ணீா் திறந்து விடப்படும்.

கடந்த 10 ஆண்டில் நடைபெற்ற ஆட்சியில் விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள் என்பதை அறிவீர்கள். ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் உயர வேண்டும் என்பதற்காக தனி பட்ஜெட் போடப்பட்டு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நீர் மேலாண்மைக்கு என்று தனி துறையை ஒதுக்கி அதற்கு தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்வாய் தூர்வாருதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

வருகிற 20-ந்தேதி தொடங்க உள்ள பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்கு என்று தனி நிதியை முதல்வர் ஒதுக்கி அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், ஒன்றியக்குழு தலைவர்கள் பரிமளா கலையரசன், கலைவாணி கலைமணி, செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், விவசாய சங்கத் தலைவா் ஜெயராமன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 12 March 2023 12:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது