Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலைக்கு சரக்கு ரயிலில் யூரியா வருகை
திருவண்ணாமலைக்கு சரக்கு ரயில் மூலம் வந்த யூரியா, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு அனுப்பப்பட்டது
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிரிட்டுள்ள வேளாண் பயிர்களுக்குத் தேவையான உரம் மற்றும் யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வேளாண்மை துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை மணலியில் இருந்து சரக்கு ரயில் மூலம் 700 மெட்ரிக் டன் யூரியா திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அந்த யூரியா முட்டைகள் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு வேளாண் இணை இயக்குனர் முருகன் மேற்பார்வையில் சரக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.