சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: நகராட்சி ஆணையர் அதிரடி
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் அண்ணாமலையார் கோயில் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என நகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் , பொதுமக்களுக்கு இடையூறு, விபத்துகளும் ஏற்படுகின்றன.
குறிப்பாக கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளிலும், திருவுடல் தெரு, காய்கறி மார்க்கெட், ஆகிய பகுதிகளில் மாடுகள் சாலைகளில் அதிகம் காணப்படுகிறது.
இது குறித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணாமலையார் கோயில் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளை தூய்மையாக பராமரிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது . அதன் தொடர்ச்சியாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நாளை காலை பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அண்ணாமலையார் கோசாலையில் ஒப்படைக்கப்படும், உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒப்படைக்க மாட்டாது என அறிவித்துள்ளார்.