சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாபெரும் விழிப்புணர்வு கோலம்
Chess Rangoli-திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாபெரும் கோலம் வரையப்பட்டது
HIGHLIGHTS
Chess Rangoli-மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து இன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில் தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சாா்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் செஸ் பலகை போன்ற மாபெரும் கோலம் வரையப்பட்டது.
இந்த கோலத்தை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி, மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் மற்றும் சுய உதவிக்குழு உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2