/* */

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாபெரும் விழிப்புணர்வு கோலம்

Chess Rangoli-திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாபெரும் கோலம் வரையப்பட்டது

HIGHLIGHTS

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாபெரும் விழிப்புணர்வு  கோலம்
X

திருவண்ணாமலையில் வரையப்பட்ட செஸ் பலகை போன்ற மாபெரும் கோலம்

Chess Rangoli-மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து இன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில் தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சாா்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் செஸ் பலகை போன்ற மாபெரும் கோலம் வரையப்பட்டது.

இந்த கோலத்தை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி, மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் மற்றும் சுய உதவிக்குழு உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 April 2024 4:59 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!