திருவண்ணாமலையில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஏழாம் நாள் திருத்தேர் உற்சவம் கோவில் பிராகாரத்தில் நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருத்தேர் உற்சவம் கோவில் பிராகாரத்தில் நடைபெற்றது. ஏழாம் நாள் தேர் உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் ராஜ அலங்காரத்தில் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்தனர்.
முன்னதாக இன்று அதிகாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவல் காரணமாக விழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், கோவில் வளாகத்தில் விநாயகர், முருகர் , அண்ணாமலையார், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் என தனித்தனியாக சிறிய தேர்கள் அமைக்கப்பட்டிருந்தது.
மாடவீதியில் பெரிய தேர்பவனி இல்லை என்றாலும் பிரகாரத்தில் இந்த சிறிய தேர்பவனிக்கு அனுமதி அளித்ததற்கு கோவில் நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அண்ணாமலையார் பக்தர்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.