டிஎன்பிஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்
திருவண்ணாமலையில் டிஎன்பிஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
டிஎன்பிஎஸ்சி அறிவிக்கவுள்ள குருப் 2, 2A-ல் அடங்கிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பிப்ரவரி 17 ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பு வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பாடபிரிவிற்கும் தனித்தனி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகள் 17.02.2021 முதல் நேரடி வகுப்புகளாக நடைபெறவுள்ளது.போட்டித் தேர்விற்கு தயாராகும் விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 17.ம் தேதி நேரடியாக இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.