/* */

வாடிப்பட்டி அருகே, முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் நெகிழ்ச்சி சந்திப்பு..!

வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

HIGHLIGHTS

வாடிப்பட்டி அருகே, முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் நெகிழ்ச்சி சந்திப்பு..!
X

வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல் நிலைப்பள்ளி படித்த முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

சோழவந்தான்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 91 மற்றும் 92 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் இன்று தமிழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப் குழு மூலம் இணைந்து வருடம் தோறும் ஓரிடத்தில் கூடி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதன்படி நடத்தி வந்தனர் .

இந்த ஆண்டு அதே போல் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மலரும் நினைவுகளில் தாங்கள் படித்த காலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை கூறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் .

தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து பாட்டு நடனம் விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகமாக பொழுதை கழித்தனர் .

இதுகுறித்து, பேட்டியில் அவர்கள் கூறும்போது,

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளியில் படித்த அனைவரும் வாட்ஸ் அப் குழு மூலம் இணைந்து முதலில் ஒன்றாகப்படித்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் மட்டும் ஓரிடத்தில் கூடி எங்களின் மலரும் நினைவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், பணிகள் பற்றி பகிர்ந்து கொண்டோம். அப்போது, அடுத்த வரும் காலங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வது என முடிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து, இன்று மதுரையில் அனைவரும் ஒன்று கூடி தங்கள் குழந்தைகளுடன் ஆடல் பாடல் விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகமாக கொண்டாடினோம்.

கூட்டு குடும்பங்கள் சிதைந்துவரும் இந்த காலத்தில் இதுபோன்று நமது கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் மற்ற பள்ளிகளில் படித்த மாணவர்களும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தாங்கள் படித்த பள்ளிக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்ய வேண்டும். இது அவர்கள் படித்த பள்ளிக்குச் செய்யும் பெரிய உபகாரம் ஆகும்.

ஏழை மற்றும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கூறினார். நிகழ்ச்சி முடிவில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி நெகிழ்ச்சியுடன் அடுத்த வருடம் சந்திப்போம் என தங்களின் ஊருக்குச் சென்றனர்.

Updated On: 27 May 2024 10:55 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  2. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  3. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  4. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  5. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  7. சினிமா
    அன்பு, ஆனந்தி காதல்...! இனி இப்படித்தான் போகப்போகுதா?
  8. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  9. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!
  10. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் குழப்பம் : செங்கோட்டையனை துாண்டுகிறார்களா?