/* */

அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தமிழர் விடுதலை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவி விலகக் கோரி நெல்லையில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தமிழர் விடுதலை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
X

நெல்லையில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி ரீதியாக திட்டி மன உளைச்சலை ஏற்படுத்திய அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி நெல்லையில் தமிழர் விடுதலை களம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சார்ந்த முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக ஒருமையில் பேசியுள்ள தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் மீது உடனடியாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் (கிழக்கு) மங்களராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி போஸ் பாண்டியன், தச்சை பகுதி செயலாளர் அந்தோணி, பாளை பகுதி தலைவர் முருகன், மானூர் ஒன்றிய செயலாளர் சுத்தமல்லி மகாராஜன், பாளை ஒன்றிய செயலாளர் தருவை மகேஷ், மானூர் ஒன்றிய தலைவர் சீவல் பாண்டியன் மற்றும் சோனியா முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மேலப்பாளையம் பகுதி செயலாளர் கருங்குளம் சிவா நன்றி கூறினார்.

Updated On: 9 April 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...