Begin typing your search above and press return to search.
அரசு மெக்கானிக்கிடம் 2 லட்ச ரூபாய் பறிமுதல்
திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக மெக்கானிக்கிடம் 2 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை குழுவினர் உதவி பொறியாளர் வேலப்பன் தலைமையில் டவுனில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியை சேர்ந்த பெருமாள் சாமி என்பவர் மோட்டார்பைக்கில் இரண்டு லட்ச ரூபாய் பணம் எடுத்து சென்றுள்ளார். ஆனால் அந்த பணத்துக்கான ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருநெல்வேலி சப்கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பெருமாள் சாமி போக்குவரத்துக் கழக டெப்போவில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.