/* */

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

திருவாரூரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
X

திருவாரூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மாநிலம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஆட்சியில் சங்க உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தில் கணினி உதவியாளராக பணிபுரியும் அனைவருக்கும் அரசாணையின்படி இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் புஷ்பநாதன், மாவட்ட செயலாளர் செந்தில், மாநில தணிக்கையாளர் ஜம்ரூத் நிஷா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 March 2022 1:25 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  2. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  3. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  4. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  5. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  6. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  7. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  8. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  10. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது