Begin typing your search above and press return to search.
தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டம்
தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கைது.
HIGHLIGHTS
நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும், தொழிற்சங்க சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் சிஐடியு, எஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தஞ்சை ஆற்று பாலத்தில் இருந்து பேரணியாக வந்து 500க்கும் மேற்பட்டவர்கள் சென்று தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.