தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நடைபெற்றது. வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு மற்றும் பயிற்சி முகாமில் மாற்றுத்திறனாளி வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு மற்றும் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் தென்னிந்திய மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிமியர் லீக் தொடர் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்தனர். தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிமியர் லீக் தொடருக்கு அனைத்து மாவட்டத்திலும் உள்ள திறமையான மாற்றுதிறானளிகள் கிரிக்கெட் வீரர்களையும் ஒருங்கினைத்து 6 அணிகளாக பிரித்து போட்டிகள் நடைபெற உள்ளது. இத் தொடர்களின் மூலம் சுமார் 70க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளி வீரர்கள் விளையாட வாய்ப்பு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு மற்றும் பயிற்சி முகாமில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.