/* */

சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் சென்றன

சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் சென்றன
X

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் அனைத்து கட்சியினர் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் குலுக்கல் நடைபெற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்படி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட குலுக்கலில் 2049 வாக்குச்சாவடிகளுக்கு 2463 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2463 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2667 VVPAT எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதன்பின் இயந்திரங்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

Updated On: 13 March 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!