/* */

நாமக்கல்லில் முப்பெரும் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் கோட்டையில் இன்று காலை ஸ்ரீ நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முப்பெரும் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
X

நாமக்கல் கோட்டையில் இன்று காலை ஸ்ரீ நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது.

நாமக்கல்லில் இன்று முப்பெரும் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலையில் நடைபெற்ற ஸ்ரீ நரசிம்மர் தேரோட்டத்ததில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்குப்பகுதியில் ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி திருக்கோயில், மலையைக் குடைந்து குடவரைக் கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. அக்கோயிலின் மேற்குப்புறத்தில், 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. மலையின் கிழக்குப்புறத்தில் ஸ்ரீ அரங்கநாயகித் தாயார் உடனுறை அரங்கநாதர் திருக்கோயில் உள்ளது.

இந்த 3 கோயில்களிலும் பங்குணி தேர்த்திருவிழா கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. நடைபெற்று வருகிறது. இன்று 6ம் தேதி காலை கோட்டைப் பகுதியில் ஸ்ரீ நரசிம்மர் சவாமி தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மப் பெருமாள் திருத்ததேருக்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ், டிஎஸ்பி சுரேஷ், கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வ சீராளன், நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கோயில் உதவி கமிஷனர் இளையராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் தேர்வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வந்து நிலை சேர்த்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு மெயின் ரோட்டில் ஸ்ரீ அரங்காநதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. முப்பெரும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் உத்தரவின் பேரில், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் மேற்பார்வையில், நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் ட்ரோன் மூலம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈபட்டனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

Updated On: 8 April 2023 5:22 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்