/* */

நாமக்கல்லில் விதிகளை மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

நாமக்கல்லில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் விதிமுறை மீறி இயக்கிய 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் விதிகளை மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி
X

பைல் படம்.

நாமக்கல் வடக்கு ஆர்டிஓ அலுவலகமோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன் மற்றும் கவிதா ஆகியோர் நாமக்கல் பைபாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக கார் ஓட்டி வந்த 45 வாகன உரிமையாளர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அவர்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராதம் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாமக்கல் வடக்கு ஆர்டிஓ அலுவலக கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் ராசிபுரம் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடத்திய வாகன தனிக்கையின் போது, 789 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.

பல்வேறு விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கிய 170 வாகன உரிமையாளர்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அவர்களிடம் இருந்து அபராதம் மற்றும் வரியாக ரூ.5.06 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

மேலும், போதிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 11வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வடக்கு ஆர்டிஓ முருகேசன் தெரிவித்தார்.

Updated On: 7 Sep 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!