Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக சரோஜ்குமார் தாக்கூர் நியமனம்
நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக சரோஜ்குமார் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக கடந்த 9 மாதமாக சக்திகணேசன் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குணமடைந்து சிலநாட்களுக்கு முன்பு மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இந்தநிலையில் அவர் கடலூர் மாவட்ட எஸ்.பியாக மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை சைபர் கிரைம் எஸ்.பியாக பணியாற்றி வந்த சரோஜ்குமார் தாக்கூர் இடமாற்றம் செய்யப்பட்டு நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.