அகில இந்திய குடோ விளையாட்டுப்போட்டி நாமக்கல் பாரதி பள்ளி மணவர் சாதனை..!
அகில இந்திய குடோ விளையாட்டுப்போட்டியில் நாமக்கல் பாரதி பள்ளி மணவர் சாதனை படைத்துள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் :
ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவர் குடோ விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.
குடோ விளையாட்டு என்பது கராத்தே போன்ற ஒரு தற்காப்புக்கலையாகும். குஜராத் மாநிலம் சூரத்தில் தேசிய அளவிலான குடோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 3000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
அதில் தமிழ்நாட்டின் சார்பாக, நாமக்கல் ரெட்டிப்பட்டி பாதி மேல்நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு மாணவர் சங்கீர்த் கலந்துகொண்டார். சிறப்பாக விளையாடிய அவர் தேசிய அளவில் 3ம் இடத்தை பெற்று தமிழ்நாட்டிற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும், மாணவர் சங்கீர்த், வருகிற மே மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள சர்வதேச குடோ விளையாட்டுப்பேட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அளவில் சாதனைப் படைத்த மாணவர் சங்கீர்த்தை, பாரதி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் ராமசாமி, செயலாளர் சாரதாமணி, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், குடோ விளையாட்டு தேசிய பயிற்சியாளரும், மாநில பொதுச் செயலாளருமான ஷேக்அப்துல்லா ஆகியயோர் பாராட்டினார்கள்.