/* */

நாமக்கல்லில் விவசாயிகள், சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மற்றும் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் விவசாயிகள், சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மற்றும் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வேர் குறைதீர் கூட்டம், வருகிற 31ம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலவலகத்தில் நடைபெறுகிறது. டிஆர்ஓ மணிமேகலை தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சமையல் கேஸ் கம்பெனி அலுவலர்கள், சமையல் எரிவாயு ஏஜென்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்துகொண்டு சமையல் எரிவாயு விநியோகம் சம்மந்தமான குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Jan 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்