/* */

காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

சுங்குவார்சத்திரம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.

ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கான அனைத்து பணிகளிலும் மாவட்ட தேர்தல் நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்குடன் அனைத்து பகுதி மக்களுக்கும் மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் , ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராட்சத பலூன் மூலம் விழிப்புணர்வு மற்றும் இரண்டு கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

மேலும் முதல் முறை வாக்காளிக்க உள்ள கல்லூரி மாணவ , மாணவியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அனைவரும் வாக்களிப்போம் என்ற உறுதி மொழியை ஏற்றனர் .


இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே இருந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம் ஆகியோர் இணைந்து அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு கோஷத்துடன் 2 கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்றனர்.

வழி நெடுகிலும் இருந்த பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துண்டு பிரசுரங்கள் வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் , ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மகளிர் சுய உதவி இயக்குனர் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 5 April 2024 2:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  9. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  10. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!