/* */

மோகனூர் அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மோகனூர் அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

மோகனூர் அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும்  திட்டத்தை கைவிட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
X

நாமக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மோகனூர் அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாமக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாது:

நாமக்கல் மாவட்டம், மோனூர் ஊராட்சி ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுக்க உள்ள பகுதிகளான வளையப்பட்டி, லத்துவாடி, பரளி, ஆண்டாபுரம் ஆகிய கிராமங்களை பார்வையிட்டோம். ஏறத்தாழ 2,500 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளதாக தகவல் உள்ளது. இதனால் ஆயிரக்ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், கிணறுகள் பாதிக்கப்படும். நிலம் எடுக்கும்போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். எனினும் இதுவரை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை.

பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு பற்றி எதுவும் சொல்லவில்லை. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் எடுப்பதில் ஆட்சேபனை இல்லை. இதில் விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் எடுப்பதில் தான் ஆட்சேபனையாக உள்ளது. விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டுமென்பதற்காக ஆய்வு செய்தோம். சிப்காட் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஜூன் 12ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டிபோராட்டத்தில் ஈடுபடுவோம்.

தற்போது நிலம் கையகப்படுத்த உள்ள இடத்தின் அருகே, ஏற்கனவே சிட்கோவிற்கு எடுக்கப்பட்ட நிலம் கடந்த 10 ஆண்டுகளாக அப்படியே உள்ளது. எந்த பயன்பாட்டிற்கும் நிலம் பயன்படுத்தப்படவில்லை. நாமக்கல் நகராட்சி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் தூசூர் ஏரியில் கலக்கச் செய்கிறது. இதனால் ஆயிரக்கணககான விளைநிலம் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக மாற்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். சங்க துணைத் தலைவர்கள் துளசிமணி, லகுமையா, மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஏஐடியுசி செயலாளர் தனசேகரன் உள்ளிட்டோர் பேட்டியின்போது உடனடிருந்தனர்.

Updated On: 25 May 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...