Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு காங்கிரசார் நினைவஞ்சலி
நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படத்திற்கு காங்கிரசார் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் 37ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், சுப்பிரமணியம், நகர காங்கிரஸ் தலைவர் மோகன், காங்கிரஸ் பிரமுகர்கள் டாக்டர் பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.