தசை சிதைவு நோயால் பாதித்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் வீடு
மோகனூரில், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான வீட்டை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.
HIGHLIGHTS
மோகனூரில், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான வீட்டை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.
மோகனூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் மிகவும் கடுமையான தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். கூலி வேலை செய்து ஜீவனம் நடத்தி வரும் நிலையில் மகன், மகள் இருவரும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தங்கபாண்டியன் குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மோகனூரில் மாவட்ட ஆட்சியர் உமா, ராஜ்யசபா எம்.பி. ராஜேஸ்குமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின்போது தங்கபாணடியன் குடும்பத்தினருக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ரூ.9 லட்சம் மதிப்பில் வீடும் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து கட்டி முடிக்கப்பட்ட வீடு தங்கபாண்டியன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மோகனூரில் நடைபெற்றது. ராஜேஷ்குமார் எம்.பி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தங்கபாண்டியன் குடும்பத்தினரிடம் வீட்டிற்கான சாவியை ஒப்படைத்தர். மாவட்ட ஆட்சியர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.